24 66b7236589fb7
இலங்கைசெய்திகள்

சுமந்திரன் நாமல் திடீர் சந்திப்பு

Share

சுமந்திரன் நாமல் திடீர் சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் இன்றைய தினம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச வெற்றி பெற்றால் வடக்கு, கிழக்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மாவட்டங்களின் அபிவிருத்தி குறித்து இருவரும் கலந்துரையாடியதாக தெரியவந்துள்ளது.

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்துறை உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட தயார் என நாமல், சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

அப்பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதுடன் இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தையும் சிறந்த எதிர்காலத்தையும் பெற்றுக்கொடுக்க தயாராக இருப்பதாக நாமல் இதன்போது உறுதியளித்துள்ளார்.

தேர்தலில் வெற்றியடைந்தால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள குடிமக்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஒன்று உறுதி செய்யப்படும் என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மாவட்டங்களை சர்வதேச வர்த்தக மையங்களாக மேம்படுத்த தான் விரும்புவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து குறைப்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு நாமல் கேட்டுக்கொண்டதாக காசிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...