rtjy 151 scaled
இலங்கைசெய்திகள்

ஐ.நா பேரவையில் பேசும் வாய்ப்பை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Share

ஐ.நா பேரவையில் பேசும் வாய்ப்பை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அண்மையில் ஜெனீவாவிற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் பேசும் வாய்ப்பை இழந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுவாக ஒரு பிரச்சினையை எழுப்ப விரும்பும் ஒருவருக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வுகளில் பேசுவதற்கு ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும்.

இதன் அடிப்படையில் தமது சகாவான ஹெக்டர் அப்புஹாமிக்கு அமர்வுகளில் 45 வது இடம் வழங்கப்பட்டது. ஆனால் நாள் முடிவில் அவர் அமர்வுகளில் பேச நேரம் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் குறித்த விவகாரத்தை விரைவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு எடுத்து செல்லவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்புஹாமி, உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்கள் பற்றிய பிரச்சினையை எழுப்ப இருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தாங்கள் தங்கள், சொந்த பணத்தை சுற்றுப்பயணத்திற்காக செலவிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...