23 653dc94f9ad92
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்பில் மர்மம்

Share

இலங்கையில் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்பில் மர்மம்

இலங்கையில் காலநிலையில் துல்லியமான கணிப்புகளை செய்வதற்கு போதிய அறிவோ பயிற்சியோ இல்லாமல் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவில் சாதாரண தரம் மட்டும் சித்தியடைந்த ஐந்து வானிலை ஆய்வாளர்கள் பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்காளர்கள் குழு அண்மையில் வெளியிட்ட விசேட அறிக்கையின் மூலம் இது தெரியவந்துள்ளது.

 

வளிமண்டலவியல் திணைக்களம் என்பது நாட்டிற்கு முன்வைக்கப்படும் சில கணிப்புகள் சரியாக இல்லாத காரணத்தினால் சமூகத்தால் அடிக்கடி விமர்சிக்கப்படும் ஒரு நிறுவனமாகும்.

 

குறிப்பாக விவசாயம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதில் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட பிழையான காலநிலை முன்னறிவிப்புக்கள் தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

 

இந்த நிலைமையை ஆராய்ந்த கோபா குழு தனது அறிக்கையில், துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடுவதற்கு அவசியமான ரேடார் அமைப்பு இல்லாமல் 15 ஆண்டுகளாக வானிலை முன்னறிவிப்புகளையும் கணிப்புகளையும் நாட்டிற்கு வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கி வருகிறது.

 

இது தவிர, கொன்கலகந்த பகுதிக்கு கணிப்புக்கான ரேடார் அமைப்பை ஏற்படுத்த, திணைக்களம் 402 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது, ஆனால் 13 ஆண்டுகளாக அது செயல்படுத்தப்படவில்லை.

 

இந்த ரேடார் அமைப்பை நிறுவுவதற்காக கொண்டுவரப்பட்ட உபகரணங்களில் 91 லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் ஏற்கனவே காணாமல் போயுள்ளதாக கோபா அறிக்கை காட்டுகிறது.

 

நாடு முழுவதும் பெய்யும் மழையின் வீதத்தை அளக்க 444 மழை மானிகள் நிறுவப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், 44 அளவீட்டுத் தொகுப்புகளிலிருந்து வளிமண்டலவியல் திணைக்களம் எந்தவொரு தரவுகளையும் பெறவில்லை என்று இந்த அறிக்கையில் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...