tamilni 68 scaled
இலங்கைசெய்திகள்

கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: தப்பியோடிய அரசியல்வாதியின் மகன்

Share

கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: தப்பியோடிய அரசியல்வாதியின் மகன்

கொழும்பு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் யுவதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கோடீஸ்வர வர்த்தகரின் மகளை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டின் பிரகாரம், ஆளுநரின் மகனைக் கைது செய்வதற்காக யால பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்த நிலையில், சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது சந்தேகநபரின் சொகுசு ஜீப் மற்றும் கையடக்க தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதலுக்கு உள்ளான அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை கொண்ட 34 வயதுடைய பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்து சந்தேகநபருக்கு எதிராக பயணத்தடை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர் கதிர்காமம் பகுதிக்கு சென்றுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய, யால பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சந்தேகநபர் தங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று விடுதியை சுற்றிவளைத்த நிலையில், சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியை பொலிஸ் காவலில் எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகத நிலையில், சந்தேகநபருக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட முறிவு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...