tamilni 68 scaled
இலங்கைசெய்திகள்

கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: தப்பியோடிய அரசியல்வாதியின் மகன்

Share

கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: தப்பியோடிய அரசியல்வாதியின் மகன்

கொழும்பு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் யுவதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கோடீஸ்வர வர்த்தகரின் மகளை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டின் பிரகாரம், ஆளுநரின் மகனைக் கைது செய்வதற்காக யால பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்த நிலையில், சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது சந்தேகநபரின் சொகுசு ஜீப் மற்றும் கையடக்க தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதலுக்கு உள்ளான அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை கொண்ட 34 வயதுடைய பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்து சந்தேகநபருக்கு எதிராக பயணத்தடை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர் கதிர்காமம் பகுதிக்கு சென்றுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய, யால பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் சந்தேகநபர் தங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று விடுதியை சுற்றிவளைத்த நிலையில், சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியை பொலிஸ் காவலில் எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகத நிலையில், சந்தேகநபருக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட முறிவு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...