6 2 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை டொலர் வருமானம்: மத்திய வங்கி தகவல்

Share

இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள பெருந்தொகை டொலர் வருமானம்: மத்திய வங்கி தகவல்

இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 1,557 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது ஏறக்குறைய இரண்டு மடங்கு வளர்ச்சி என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் தவிர்ந்த 1,762 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேவைத் துறைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 3,144 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களின் பணம் 2,823 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஜூன் மாதம் இறுதிக்குள், நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியும் ஜூன் மாதம் வரையில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
23 64a7f7facdef2 1
இலங்கைசெய்திகள்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: பரத் தர்ஷன் இயக்கத்தில் ‘ஓ சுகுமாரி’ திரைப்படத்தில் நடிக்கிறார்!

தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக...

Eggs 848x565 1
இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் முட்டைத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அதிக அளவில் கோழிகள் இறந்ததன் காரணமாக, எதிர்காலத்தில் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு...

854660 untitled 2
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிதியுதவி: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள...

images 8
இலங்கைசெய்திகள்

மின் விநியோகம் வழமைக்குத் திரும்ப நடவடிக்கை: ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

அதிதீவிர வானிலையால் துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளை வெகு விரைவில் மீள இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...