25 683c090ba0cec
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளின் தலைவரது பெயரைக் கூறி இனவாதம் பேசும் சரத் பொன்சேகா..

Share

வடக்கில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுவது தவறான விடயமாகும், அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா என தெரிவித்துள்ளார்.

அது அரசால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், போரில் உயிரிழந்த தமது உறவுகளையே நினைவு கூருகின்றோம் என அவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகின்றது.

இறந்தவர்களை நினைவு கூருவது தவறில்லை. ஆனால், பிரபாகரன் உயிரிழந்த இடத்துக்கே சென்று, அவர் இறந்த நாளில் அதனைச் செய்வது தவறு.

பிரபாகரன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளைக் கௌரவப்படுத்தும் நோக்கில் அவர்களை நினைவு கூருவது தவறாகும். அது தேசத்துரோக நடவடிக்கையாகவே கருதப்படும்.

இப்படியான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பு என வரும்போது வாக்குகளைக் கருத்திற்கொள்ளக்கூடாது. முதுகெலும்புடன் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அண்மைக்காலமாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் இனவாதத்தை பரப்பும் வகையில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
23 657a8557d51bd md
செய்திகள்இலங்கை

காய்கறி விலையில் கடும் அதீத உயர்வு: பச்சை மிளகாய் 1,000 ரூபாயைத் தாண்டியது; மக்கள் கடும் அவதி!

இலங்கையின் சில பகுதிகளில் தாழ்நிலக் காய்கறிகளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதீத உயர்வை எட்டியுள்ளதாகச்...

25 6943e3aa87891
செய்திகள்உலகம்

தன்னை ‘ஹீரோவாக’ காட்டிக்கொள்ள 12 நோயாளிகளைக் கொன்ற மருத்துவர்: பிரான்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு!

பிரான்சில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் திட்டமிட்டு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் மரணத்திற்கு காரணமான...

1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

674b2a65b606d hardik pandya in frame 191544440 16x9 1
விளையாட்டுசெய்திகள்

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி: 16 பந்துகளில் அரைசதம் அடித்து ஹர்திக் பாண்டியா புதிய சாதனை!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான 5-ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில்...