முள்ளிவாய்க்கால் ஊர்தியை பார்த்து கதறி அழுத இளைஞன்
முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) நினைவு சுமந்த ஊர்தியை கண்டு இளைஞன் ஒருவன் கதறி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் இன்று (18.05.2024) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது.
இறுதி யுத்தக் காலத்தில் திட்டமிட்ட தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் போன்றவற்றால் மக்களுக்கு உணவு, மருந்து என எதுவுமே கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில், இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகளால் 2009ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டனர்.
இதனை நினைவு கூறும் முகமாகவே இந்த வாரம் முழுவதும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் நடாத்தப்படுகின்றது.