24 6647ef0a03a29
இலங்கைசெய்திகள்

தமிழீழத்தின் இறுதிப் போர் கடைசி தமிழ் மகன் உள்ளவரை ஆறாத வடுவாக காணப்படும்

Share

தமிழீழத்தின் இறுதிப் போர் கடைசி தமிழ் மகன் உள்ளவரை ஆறாத வடுவாக காணப்படும்

இறுதிப் போரிலே பல்லாயிரகணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்ட துன்பியல் நிகழ்வினை உலகத்தில் கடைசி தமிழ் மகன் உள்ளவரைக்கும் ஆறாத வடுவாக காணப்படும் என்பது மறைக்க முடியாத ஓர் உண்மை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா. சரவணா தெரிவித்துள்ளார்.

ஜெயா. சரவணாவால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மே மாதம் 18 ஆம் திகதி எமது உரிமை போராட்டம் மௌனிக்கப்பட்ட கரி நாளாகும். வன்னி பெரு நிலப்பரப்பான முள்ளிவாய்க்காலில் எமது போராட்டம் நிறைவு பெற்றது.

இறுதி போரிலே பல்லாயிரகணக்கான மக்கள் உயிர்கள் காவுகொள்ளப்பட்டது. இந்த துன்பியல் நிகழ்வினை உலகத்தில் கடைசி தமிழ் மகன் உள்ளவரைக்கும் ஆறாத வடுவாக காணப்படும் என்பது மறைக்க முடியாத ஓர் உண்மையாகும்.

இறுதிப்போர் காலத்தில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடங்களும் மரணத்தின் ஓலங்களாகவே காணப்பட்டது. சுதந்திரத்திற்காக போராடி வீர மரணம் அடைந்த வீர மறவர்களையும் , இப்போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த அப்பாவி மக்களையும் நினைவு கூரும் புனித நாளே இந்நாள் ஆகும்.

இந்நாளிலே எமது உரிமை போராட்டத்தில் உயிர் துறந்த மக்களின் உயிர் மூச்சு இன்றும் காற்றோடு கலந்து தமது உரிமை தாகத்தோடு எம் மூச்சுக்காற்றோடு கலந்துள்ளது.

தமிழர் ஐக்கிய முன்னணி சார்பாக விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த வீர மறவர்களுக்கும், மக்களுக்கும் எமது வீர வணக்கத்தினை தெரிவித்துக் காெள்கின்றோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...