tamilni 77 scaled
இலங்கைசெய்திகள்

நீதிபதிக்கே நியாயம் கிடைக்காத இலங்கை

Share

நீதிபதிக்கே நியாயம் கிடைக்காத இலங்கை

தனக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது, தனக்கு மரண அச்சுறுத்தல் இருக்கின்றது என்று முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தன்னுடைய பதவி விலகல் கடிதத்திலேயே வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றார் என ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு நீதி கோரி இன்று கொழும்பில் சடத்தரணிகள் பெருமளவானோர் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சாதாரணமாக நாங்கள் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு அதில் எங்களுக்கு இணக்கமில்லை என்று சொன்னால் நாங்கள் அதற்கு மேற்பட்ட நீதிமன்றத்தை நாடுவோம்.

ஆனால் ஒரு நீதிபதிக்கே நியாயம் கிட்டாமல், ஒரு நீதிபதி நீதித்துறையில் தான் வழங்கிய தீர்ப்புக்காக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு, தன்னுடைய செயல்களுக்காக உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார்.

தனக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது, தனக்கு மரண அச்சுறுத்தல் இருக்கின்றது என்று தன்னுடைய பதவி விலகல் கடிதத்திலேயே வெளிப்படையாகச் சொல்லி நாட்டை விட்டு போகின்ற ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கின்றது.

ஆகையினால் தான் எங்களுடைய வழமையான எதிர்ப்பு முறையினை கைவிட்டு வீதிக்கு இறங்கி இன்று உச்சநீதிமன்றத்திற்கு முன்பாகவும், நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முன்பாகவும் ஒன்று திரண்டு இந்த கோஷத்தை எழுப்பிக் கொண்டிருக்கின்றோம்.

நீதிச் சேவைக்கு தொடர்ச்சியாக ஒரு அச்சுறுத்தல் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் இது இப்போது ஒரு உச்ச நிலையை அடைந்திருக்கின்றது. ஆகையினால் உடனடியாக இதற்கு ஒரு மாற்று வழி கண்டுபிடிக்கப்பட வேண்டும். இந்த நிலை திருத்தப்பட வேண்டும்.

இல்லை என்று சொன்னால் சட்டத்தின் ஆட்சி என்பது இந்த நாட்டில், முன்னொரு காலத்திலே இருந்தது என்ற சரித்திரமாக மட்டும் இருக்குமே தவிர, சட்டத்தின் ஆட்சி என்றால் என்னவென்று கேட்கும் ஒரு சூழ்நிலை வந்துவிடும்.

ஆகையினால் இது சம்பந்தமாக உடனடியாக ஒரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எங்களுடைய கோஷமாக இருக்கின்றது என குறிப்பிட்டார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...