rtjy 6 scaled
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலக சட்டமா அதிபரே காரணம்

Share

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலக சட்டமா அதிபரே காரணம்

சட்டமா அதிபரின் அச்சுறுத்தலினாலேயே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளை கண்டித்தும் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்வத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் போராட்டமொன்றினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இந்த நிலையில், நாளை(02.10.2023) காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை சர்வதேசததிற்கு எடுத்துக் காட்டும் வகையில் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...