7 13
இலங்கைசெய்திகள்

சஜித்துடன் முரண்பாடு : தேர்தலில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி

Share

சஜித்துடன் முரண்பாடு : தேர்தலில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி

சஜித் (Sajith Premadasa) தொடர்பில் தான் விசனமடைந்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்தும் தான் இல்லாத காரணத்தால் தனக்கு வாக்களிக்க வேண்டாமெனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும (Ajith Mannaperuma) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் இந்த தேர்தலில் கம்பஹா (Gampaha) மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனுவில் கையொப்பமிட்டேன்.

கம்பஹா மாவட்டத்தில் 20 வருடமாக அரசியல் அமைப்பாளராக பதவி வகித்துள்ளேன்.

இம்முறை தேர்தலில் போட்டியிட கையொப்பமிட்டாலும் போட்டியிலிருந்து விலகி நிற்க நான் தீர்மானித்துள்ளேன்.

ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்தும் நான் இல்லாத காரணத்தால் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

சஜித் பிரேமதாச தொடர்பில் நான் கடும் விரக்தியடைந்துள்ளேன் காரணம் வேட்புமனுவில் கையொப்பமிட்டு 24 மணிநேரத்துக்குள் வேறு ஒருவரை கம்பஹா மாவட்ட அமைப்பாளராக நியமிக்க சஜித் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்காகவும் ரணிலுக்காகவும் (Ranil Wickremesinghe) வேலை செய்த ஒருவரை அவ்வாறு நியமித்துள்ளார் இதனால் நான் மிகவும் விரக்தியடைந்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...