நுவரெலியா மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சிறிநேசன் ஞானமுத்து ஆகியோர் நேற்று (டிசம்பர் 4) நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
முதற்கட்டமாக வட்டவளை, ரொசல்ல ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்டு விசேட தங்குமிடங்களில் இருக்கும் மக்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் (Dry Rations) இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரில் கண்டறிந்து, அவர்களுக்கு உடனடித் தேவைகளை வழங்குவதற்கான உதவிகளை வழங்குவதே இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.