13 28
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் அத்தியாவசியமானது! தர்மப்பிரிய திசாநாயக்க

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் அத்தியாவசியமானது! தர்மப்பிரிய திசாநாயக்க

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் அத்தியாவசியமானது என தேசிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வாகனம், எவ்வாறான வாகனம் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பணிகளை முன்னெடுப்பதற்கு வாகனங்கள் மிகவும் இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவீன வாகனமொன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பழைய வாகனங்களில் உதிரிப் பாகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றை பழுதுபார்ப்பது பாரிய செலவினை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில அரச வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கிடைக்கப்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...