1706789384
இலங்கைசெய்திகள்

கிழக்கில் 2,700 தொல்பொருள் இடங்கள்: மட்டக்களப்பில் மக்கள் மீது வழக்குத் தொடரப்பட்டமை குறித்து சாணக்கியன் விசனம்!

Share

கிழக்கு மாகாணத்தில் பாரிய அளவில் நிலங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 2,700 இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தின் தரவுகள் வருமாறு:

மண்முனை தென் எருவில் பற்று: 19 இடங்கள்.
போரதீவுப் பற்று: 34 இடங்கள்.

போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களம் எல்லை அடையாளப் பதாகைகளை நிறுவ முயன்றபோது, அப்பகுதி மக்கள் அதற்குத் தடையாக இருந்துள்ளனர்.

பதாகைகள் நிறுவப்பட்டால் அந்த இடங்கள் மக்களின் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் என்ற அச்சத்தில் மக்கள் போராடியுள்ளனர்.

இந்த எதிர்ப்பில் ஈடுபட்ட சுமார் 55 பொதுமக்கள் மீது தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸாரினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகச் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

மக்களின் பூர்வீக நிலங்கள் இவ்வாறு திட்டமிட்ட முறையில் அடையாளப்படுத்தப்படுவது பாரிய சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
16 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட மாகாண வீதி அபிவிருத்திக்கு முக்கிய முன்னுரிமை: முழுமையாகப் புனரமைக்க ஆளுநர் திட்டம்

வட மாகாணத்தில் உள்ள அனைத்து வீதிகளையும் எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைத்து, போக்குவரத்து...

15 15
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி – மனோ கணேசன் இடையிலான தொலைபேசி உரையாடல்: சந்திப்பிற்கு இணக்கம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று...

14 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விவசாயிகளின் நலன் கருதி QR குறியீடு இன்றி எரிபொருள் வழங்க விசேட அனுமதி

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமைக்கு அப்பால், விவசாயிகளின் அறுவடை...

13 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல்: விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் விநியோகச் சவால்கள் குறித்து ஆராய்வதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...