22 4
இலங்கைசெய்திகள்

சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Share

சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்றத்தில் உள்ள 20 உறுப்பினர்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த 20 உறுப்பினர்களுக்கும் இது தொடர்பில் நினைவூட்டலை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நாடாளுமன்ற தலைவர்களுக்கு அறிவித்துள்ளது.

சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டிய 169 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதை ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும்.

இந்நிலையில், குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்காத இந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு விசேட கவனத்தை செலுத்தியுள்ளது.

இதேவேளை, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்கும் புதிய சட்டத்தின்படி, ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்குள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது சொத்துப் பிரகடனத்தை சமர்ப்பிக்கத் தவறினால், ஓராண்டுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது பன்னிரெண்டு மாத ஊதியத்திற்கு சமமான அபராதம் அல்லது இரண்டையும் விதிப்பதற்கு சட்ட விதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...