25 6909c0c4a949f
இலங்கைஅரசியல்செய்திகள்

பெண்களை வர்ணிக்கும் உறுப்பினர்கள் குறித்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சாமர சம்பத் தசநாயக்க வலியுறுத்தல்!

Share

பெண்களை வர்ணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாகக் கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

தங்களது கட்சியில் அவ்வாறு யாரேனும் நடந்துகொண்டால், அவர்களை உடனே பதவியில் இருந்து நீக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களை ‘அழகானவர்கள்’ உள்ளிட்ட சொற்களைக் கொண்டு வர்ணிக்கும் அமைச்சர்களை வைத்துக்கொண்டு எவ்வாறு கல்வியை முறையாக முன்னெடுக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஆகவே, இது குறித்து ஜனாதிபதியும் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதால், ஆங்கிலத்தில் பேச முடியாதவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இல்லையேல், ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டு வந்து உரையாற்றுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...