24 669b58d69002d
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு பிணை

Share

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு பிணை

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக முன்னதாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவர் கற்பிட்டி காவல்துறையில் சட்டத்தரணியுடன் இன்று முற்பகல் சரணடைந்த போது கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து புத்தளம் நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதற்கமைய அவரை இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் செல்ல புத்தளம் நீதவான் நீதிமன்றம் அனுமதியளித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய, அலி சப்ரி ரஹீம் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...