சித்தங்கேணியில் மோட்டார் சைக்கிள் திருட்டு!

202201181445191141 Tamil News Thanjavur news Motorcycle theft SECVPF

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கணி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று திருட்டு போயுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தபால் நிலையத்தில் வேலை செய்யும் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் குறித்த மோட்டார் சைக்கிளை சித்தங்கேணி மதுவரி நிலையத்திற்கு அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தவேளை அவரது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews

Exit mobile version