high capacity bikes c5c03c9907
இலங்கைசெய்திகள்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்: 2025 இல் 2,23,423 மோட்டார் சைக்கிள்கள் பதிவு!

Share

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் 223,423 மோட்டார் சைக்கிள்கள் 2025 ஆம் ஆண்டின் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

அதற்கு அடுத்தபடியாக 55,338 கார்களும், 13,850 முச்சக்கர வண்டிகளும், இந்த அனைத்து வகைகளையும் உள்ளடக்கியதாக 35,268 மின்சார வாகனங்களும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, இந்த வருடம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்குகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

திணைக்களத்திற்கு இந்த வருட இலக்காக 16 பில்லியன் ரூபா வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த இலக்கையும் தாண்டி கடந்த நவம்பர் 30 ஆம் திகதி 17.8 பில்லியன் ரூபாய் வருமானத்தை திணைக்களத்தால் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஆண்டிற்காக 18 பில்லியன் ரூபாய் வருமான இலக்கை திறைசேரி திணைக்களத்திற்கு வழங்கியுள்ளதாகவும், அந்த இலக்கையும் அடைய மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு முடியும் எனவும் அவர் மேலும் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...