24 6642ad8d1d5a2
இலங்கைசெய்திகள்

கொழும்பில் மோட்டார் சைக்கிள்களில் இரவில் சாகசம் காட்டும் இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

Share

கொழும்பில் மோட்டார் சைக்கிள்களில் இரவில் சாகசம் காட்டும் இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

கொழும்பு பிரதான வீதியில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு நீதிமன்றம் 427,500 ரூபா அபராதம் விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான 15 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்களை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி கல்லுப்பாறை மற்றும் டூப்ளிகேஷன் வீதி பகுதிகளில் பொழுதுபோக்கிற்காக அஜாக்கிரதையாகவும், அபாயகரமாகவும் இளைஞர்கள் குழு மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு திசையில் மாத்திரம் வாகனங்கள் செல்லும் குறித்த வீதியில் ஒழுக்கமற்ற முறையில் அதிவேகமாகவும், எதிர்திசையிலும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதாக மக்களிடமிருந்து பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்த விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன் சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குழுவினரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு மத்தியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதாகவும் சைக்கிளின் பின் சக்கரத்தை மாத்திரம் செலுத்தி சாகசம் காட்டி ஏனைய சாரதிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...