24 6642ad8d1d5a2
இலங்கைசெய்திகள்

கொழும்பில் மோட்டார் சைக்கிள்களில் இரவில் சாகசம் காட்டும் இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

Share

கொழும்பில் மோட்டார் சைக்கிள்களில் இரவில் சாகசம் காட்டும் இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

கொழும்பு பிரதான வீதியில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு நீதிமன்றம் 427,500 ரூபா அபராதம் விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான 15 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்களை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டி கல்லுப்பாறை மற்றும் டூப்ளிகேஷன் வீதி பகுதிகளில் பொழுதுபோக்கிற்காக அஜாக்கிரதையாகவும், அபாயகரமாகவும் இளைஞர்கள் குழு மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு திசையில் மாத்திரம் வாகனங்கள் செல்லும் குறித்த வீதியில் ஒழுக்கமற்ற முறையில் அதிவேகமாகவும், எதிர்திசையிலும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதாக மக்களிடமிருந்து பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்த விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன் சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குழுவினரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு மத்தியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதாகவும் சைக்கிளின் பின் சக்கரத்தை மாத்திரம் செலுத்தி சாகசம் காட்டி ஏனைய சாரதிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...