10 28
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் குழந்தையை காப்பாற்றுவதற்காக உயிர் விட்ட இளம் தாய்

Share

தென்னிலங்கையில் குழந்தையை காப்பாற்றுவதற்காக உயிர் விட்ட இளம் தாய்

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹர பிரதேசத்தில் தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக தாய் உயிரை விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

மின்சார இணைப்பிற்குள் ஆணியை பொருத்திய தனது இரண்டரை வயது குழந்தையை காப்பாற்ற முற்பட்ட தாயே உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் லுனுகம்வெஹர பிரதேசத்தில் வசித்த 28 வயதுடைய சந்தமாலி ஜயதிலக்க என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

வீட்டின் வரவேற்பறையில் ஜன்னல் துணியை பொருத்துவதற்காக ஆணியை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவரது குழந்தை ஆணியை எடுத்து வீட்டின் வரவேற்பறையில் உள்ள மின் இணைப்பில் செருகியுள்ளது.

 

இதைப் பார்த்த மூத்த பிள்ளை கத்தி கூச்சலிட்டது. உடனடியாக தாயாரும் அலறியடித்தபடி சிறு குழந்தையின் அருகில் சென்று குழந்தையை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.

 

பிளக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆணியை அகற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

 

மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே விழுந்து கிடந்ததால், தாயை காப்பாற்றுமாறு இரண்டு பிள்ளைகளும் கூச்சலிட்டனர்.

 

பிள்ளைகளின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்களும் வீட்டிற்கு வந்துள்ளனர். மின்சாரம் தாக்கிய பெண் லுனுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 

எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

குறித்த பெண்ணின் கணவர் கொழும்பில் பணிபுரிவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...

11908 31 10 2024 12 33 27 3 DSC 4882
விளையாட்டுசெய்திகள்

இந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் தோல்வி: கம்பீரின் எதிர்காலம் குறித்த கேள்விக்குக் கம்பீர் பதில்! 

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைச் சொந்த...

MediaFile 22
உலகம்செய்திகள்

ஹொங்கொங் உயரமான வீடமைப்பு வளாகத்தில் பயங்கர தீ: 13 பேர் பலி, 28 பேர் காயம்!

ஹொங்கொங்கில் உள்ள உயரமான வீடமைப்பு வளாகம் ஒன்றில் இன்று (நவம்பர் 26) ஏற்பட்ட பயங்கர தீ...

Screenshot 2025 11 28 000113
செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு இரணைப்பாலை துயிலுமில்லத்தில் கொட்டும் மழையிலும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி மடிந்த வீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வானது, இன்று...