கொழும்பில் மற்றுமொரு தாயும் மகளும் மாயம்
இலங்கைசெய்திகள்

கொழும்பில் மற்றுமொரு தாயும் மகளும் மாயம்

Share

கொழும்பில் மற்றுமொரு தாயும் மகளும் மாயம்

மஹரகம, பத்திரகொட, விஹாரவத்த வீதியில் வசிக்கும் தாயும் மகளும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 வயதுடைய இஷாதி ரங்கிகா என்ற தாயும் 3 வயதுடைய ஹிமாஷி எனற் பெண் குழந்தையும் 8 நாட்களாக காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 19ஆம் திகதி முதல் தனது மனைவியும் மகளும் காணாமல் போயுள்ளதாக கணவர் மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாம் 19ஆம் திகதி காலை கிருலப்பனை பாமன்கடை பழக்கடைக்கு வேலைக்குச் சென்றதாகவும், அன்று இரவு 10.00 மணியளவில் வீடு திரும்பியபோது மனைவியும் மகளும் வீட்டில் இல்லை எனவும் சமிந்து திவங்க என அழைக்கப்படும் கணவர் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், தெமட்டகொடயில் வசிக்கும் தாயாரிடம் மனைவி மற்றும் மகள் குறித்து கேட்டதாகவும், அவர்கள் வரவில்லை என கூறியதாக திவங்க குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாய் மற்றும் மகள் தொடர்பில் தகவல் தெரிந்தால் 0112-850700 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு மஹரகம பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...