ஒரே சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட தாயும் குழந்தையும்!
இலங்கைசெய்திகள்

ஒரே சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட தாயும் குழந்தையும்!

Share

ஒரே சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட தாயும் குழந்தையும்!

அங்குருவாதொட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் உடல்கள் ஒரே சவப்பெட்டியில் ஒன்றாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேற்று (22.07.2023) கொண்டுவரப்பட்டுள்ளன.

படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்றன.

இதன்போது அவர்களது மரணம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரிகளால் வெளிப்படையாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களது உடல்களை விலங்குகள் உட்கொண்டுள்ளமையினால் உடல்கள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, மேலதிக விசாரணைகளுக்காக அவர்களது உடற்கூற்று மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இருவரும் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது, அவர் பொலிஸாரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தன்னை தானே காயப்படுத்தி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர், உயிரிழந்த பெண்ணின் கணவரின் மைத்துனர் என பதில் பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...