tamilni 321 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் பாசப்போராட்டம்: தாயிற்காக மகனும், மகனுக்காக தாயும் உயிரிழப்பு

Share

தென்னிலங்கையில் பாசப்போராட்டம்: தாயிற்காக மகனும், மகனுக்காக தாயும் உயிரிழப்பு

மாத்தறை பிடபெத்தர பிரதேசத்தில் தாயை கவனிக்கவில்லை என்ற சோகத்தில் மகன் உயிர் மாய்த்த சம்பவம் பதிவாகி உள்ளது.

தாயை அலட்சியப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினால் மனமுடைந்த மகன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்த அடுத்த நாள் தாயும் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

59 வயதான உவரகல ஜதுங்கே பந்துசேன ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரை மாய்த்துள்ள நிலையில் 90 வயதான தாய் அடுத்த நாள் உயிரிழந்துள்ளார்.

உயிரை மாய்த்த மகன் மாத்தறை பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை உயிரை மாய்த்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட உயிரிழந்தவரின் மனைவி,

தனது கணவர் பிரதேச செயலகத்திற்கு அழைக்கப்பட்டு மக்கள் முன்னிலையில் திட்டியதால் மனவேதனையில் இருந்ததார்.

அவரது தாயார் தனது மகளுடன் வசித்து வந்தார். ஆனால், தனது மகளின் சித்திரவதையை தாங்க முடியாமல் இருந்தார். இதனால் தாயை தனது வீட்டிற்கு அழைத்து கவனித்துக் கொண்டார்.

எனினும் அவர் தாயை அலட்சியப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டதால் மனவேதனையில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்” என மனைவி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த மகன் தன் தாயை நன்றாகவே நடத்தினார் என கிராம மக்கள் தெரிவித்தனர். எனினும், தனது தாயை பந்துசேன என்ற சகோதரன் கவனிப்பதில்லை என அவரது சகோதரி கிராம அதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து சோகமடைந்த பந்துசேன தனது மனைவியிடம் இதனைத் தெரிவித்திருந்தார்.

சம்பவத்தன்று பிற்பகல் முதல் பந்துசேன வீட்டில் இல்லாததால், உறவினர்கள் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன், அவரது மருமகனும் இது தொடர்பில் முகநூல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால், மறுநாள் காலை அவரது உடல் வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

மகன்களின் மரணத்தை அறிந்த தாய் மொரவக மாவட்ட வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...