tamilni 321 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் பாசப்போராட்டம்: தாயிற்காக மகனும், மகனுக்காக தாயும் உயிரிழப்பு

Share

தென்னிலங்கையில் பாசப்போராட்டம்: தாயிற்காக மகனும், மகனுக்காக தாயும் உயிரிழப்பு

மாத்தறை பிடபெத்தர பிரதேசத்தில் தாயை கவனிக்கவில்லை என்ற சோகத்தில் மகன் உயிர் மாய்த்த சம்பவம் பதிவாகி உள்ளது.

தாயை அலட்சியப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினால் மனமுடைந்த மகன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

சம்பவம் குறித்து அறிந்த அடுத்த நாள் தாயும் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

59 வயதான உவரகல ஜதுங்கே பந்துசேன ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரை மாய்த்துள்ள நிலையில் 90 வயதான தாய் அடுத்த நாள் உயிரிழந்துள்ளார்.

உயிரை மாய்த்த மகன் மாத்தறை பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை உயிரை மாய்த்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட உயிரிழந்தவரின் மனைவி,

தனது கணவர் பிரதேச செயலகத்திற்கு அழைக்கப்பட்டு மக்கள் முன்னிலையில் திட்டியதால் மனவேதனையில் இருந்ததார்.

அவரது தாயார் தனது மகளுடன் வசித்து வந்தார். ஆனால், தனது மகளின் சித்திரவதையை தாங்க முடியாமல் இருந்தார். இதனால் தாயை தனது வீட்டிற்கு அழைத்து கவனித்துக் கொண்டார்.

எனினும் அவர் தாயை அலட்சியப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டதால் மனவேதனையில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்” என மனைவி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த மகன் தன் தாயை நன்றாகவே நடத்தினார் என கிராம மக்கள் தெரிவித்தனர். எனினும், தனது தாயை பந்துசேன என்ற சகோதரன் கவனிப்பதில்லை என அவரது சகோதரி கிராம அதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து சோகமடைந்த பந்துசேன தனது மனைவியிடம் இதனைத் தெரிவித்திருந்தார்.

சம்பவத்தன்று பிற்பகல் முதல் பந்துசேன வீட்டில் இல்லாததால், உறவினர்கள் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன், அவரது மருமகனும் இது தொடர்பில் முகநூல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால், மறுநாள் காலை அவரது உடல் வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

மகன்களின் மரணத்தை அறிந்த தாய் மொரவக மாவட்ட வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...