இலங்கைக்குப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

Share

கடந்த 29 நாட்களில் மட்டும் இலங்கைக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 101,192 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குப் பிறகு ஒரே மாதத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்தது இதுவே முதல் முறையாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இவ்வருடம் (2022) இதுவரை நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 80 ஆயிரத்து 26 ஆகும்.

இதேவேளை, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடு இந்தியாவாகும். அந்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 231 ஆகும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...