13 8
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர்கள் பலர் தேர்தலில் போட்டியிடவில்லையென அறிவிப்பு

Share

முன்னாள் அமைச்சர்கள் பலர் தேர்தலில் போட்டியிடவில்லையென அறிவிப்பு

கடந்த நாடாளுமன்றில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்த பல அமைச்சர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளனர்.

முக்கிய அமைச்சர்கள் ஏற்கனவே இது தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சியாகவோ அல்லது கூட்டணியாகவோ போட்டியிடப்போவதில்லை என அறிவித்தள்ளார்.

மேலும், கடந்த அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக கடமையாற்றிய கலாநிதி பந்துல குணவர்தனவும் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும், இந்த வருட பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.

அத்துடன் கடந்த அரசாங்கத்தில் நிதி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய ஷெஹான் சேமசிங்கவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநர் திரு.நவீன் திஸாநாயக்கவும் இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றின் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக இருந்த திரு.லக்ஷ்மன் கிரியெல்ல இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.

எனினும், அவரது மகள் சமிந்திரனி பண்டார கிரியெல்ல இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இவ்வருட பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் தேசியப் பட்டியலில் இருந்து போட்டியிடுவார் என கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழப்பெரும, நாலக கொடஹேவா, சமால் ராஜபக்ச, ஜோன் செனவிரட்ன, மாவை சேனாதிராஜா, சீ.வீ. விக்னேஸ்வரன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவில்லை.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...