20 2
இலங்கைசெய்திகள்

அரச ஊடகங்களில் பிரசாரம் செய்ய நாட்டம் காட்டாத வேட்பாளர்கள்

Share

அரச ஊடகங்களில் பிரசாரம் செய்ய நாட்டம் காட்டாத வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் அரச ஊடகங்களில் பிரசாரம் செய்ய நாட்டம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்ளுக்கு அரச தொலைக்காட்சி மற்றும் அரச வானொலியில் பிரசாரம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நேரத்தை பெற்றுக்கொள்வதற்கு வேட்பாளர்கள் கூடுதல் சிரத்தை காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் வரையில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சென்று ஐந்து முதல் ஆறு வேட்பாளர்கள் மட்டுமே தங்களது கொள்கைகளை விளக்கி உரையாற்றியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்த 38 வேட்பாளர்களில் 15 பேர் மட்டுமே பிரசாரப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சில வேட்பாளர்களை தொலைபேசி ஊடாகக் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...