9
இலங்கைசெய்திகள்

இனம்தெரியாத நோயினால் பாதிக்கப்படும் குரங்குகள்! மனிதர்களுக்கு பரவும் ஆபத்து

Share

பொலன்னறுவைப் பிரதேசத்தில் குரங்குகள் மற்றும் மந்திகள் இனம்தெரியாத நோயொன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நோய் மனிதர்களுக்கு தொற்றும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மற்றும் கிரிதலே பிரதேசங்களில் காணப்படும் குரங்குகள் மற்றும் மந்திகளிடையே இனம்தெரியாத நோய்த்தொற்று ஒன்று பரவிக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

குறித்த நோயானது பொலன்னறுவைப் பிரதேச பொதுமக்களுக்கும் தொற்றும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் நோயின் தாக்கம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறாமல் இருப்பது ஆபத்தானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நோய்த்தொற்றுக்கு உள்ளான குரங்குகள் மற்றும் மந்திகளைப் பரிசோதித்து நோய்த்தொற்றினை இனம்கண்டு அதனைக் கட்டுப்படுத்த தற்போதைக்கு நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
11
இந்தியாசெய்திகள்

வேண்டுமென்றே தாமதமாக சென்ற விஜய்.. வெளியான பரபரப்பு தகவல்கள்

கரூரில் நடந்த தவெக கட்சியின் பேரணிக்கு முன்னர் நாமக்கல்லில் நடந்த விஜய்யின் கூட்டத்தில் அசாதாரண சூழல்...

12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதன்முறையாக மிகவும் அபாயகரமான செயற்கை போதைப்பொருள்

இலங்கையில் முதன்முறையாக, மிகவும் அபாயகரமான செயற்கை தூண்டுதல் போதைப்பொருளான ‘மெஃபெட்ரோன்’ (Mephedrone) கண்டறியப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட குறித்த...

13
இலங்கைசெய்திகள்

ஓரினச் சேர்க்கையாளர்களை இலக்கு வைக்கும் திட்டம்: நாமல் எதிர்ப்பு

ஓரினச் சேர்க்கையாளர்களை இலக்கு வைத்து சுற்றுலா மேம்படுத்தல் செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...

10
இலங்கைசெய்திகள்

அநுரவை விரட்ட நாமல் கொண்டுள்ள அபார நம்பிக்கை

மக்களின் ஆணையை மீறிச் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவர் தலைமையிலான அரசையும் மக்களின் ஆதரவுடன்...