9
இலங்கைசெய்திகள்

இனம்தெரியாத நோயினால் பாதிக்கப்படும் குரங்குகள்! மனிதர்களுக்கு பரவும் ஆபத்து

Share

பொலன்னறுவைப் பிரதேசத்தில் குரங்குகள் மற்றும் மந்திகள் இனம்தெரியாத நோயொன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நோய் மனிதர்களுக்கு தொற்றும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மற்றும் கிரிதலே பிரதேசங்களில் காணப்படும் குரங்குகள் மற்றும் மந்திகளிடையே இனம்தெரியாத நோய்த்தொற்று ஒன்று பரவிக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

குறித்த நோயானது பொலன்னறுவைப் பிரதேச பொதுமக்களுக்கும் தொற்றும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் நோயின் தாக்கம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறாமல் இருப்பது ஆபத்தானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நோய்த்தொற்றுக்கு உள்ளான குரங்குகள் மற்றும் மந்திகளைப் பரிசோதித்து நோய்த்தொற்றினை இனம்கண்டு அதனைக் கட்டுப்படுத்த தற்போதைக்கு நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...