24 660f4babcd257
இலங்கைசெய்திகள்

பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பிக்கு ஒருவரின் செயல்

Share

பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த பிக்கு ஒருவரின் செயல்

இளம் பிக்கு ஒருவர், தாம் சாமானியராக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரிடம் பிடிபடவில்லை எனவும், தம்மை கைது செய்யும் வரை ஓயப் போவதில்லை எனவும் தெரிவித்து, கம்பஹா யக்கல பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துறவி தனது தாயுடன் நேற்று(04.04.2024) பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன் பின்னர் பொலிஸார் குறித்த பிக்குவை கைது செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது எட்டு வருடங்களுக்கு முன்னர் தான் சாமானியராக இருந்த போது செய்த இந்த திருட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் வரை தமக்கு நிம்மதி இல்லை என பிக்கு கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சாமானியராக இருந்த போது தாம் செய்த இந்த திருட்டுகளால் அடிக்கடி துன்பமடைவதாகவும், அந்த திருட்டுகளுக்கு தண்டனை பெற்று மன அமைதி பெற வேண்டும் என்பதாலேயே பொலிஸில் சரணடைய தீர்மானித்ததாகவும் பிக்கு பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...