18 11
இலங்கைசெய்திகள்

யாழில் மரண விசாரணை அதிகாரிகளின் செயற்பாடுகள் மீது குற்றச்சாட்டு

Share

யாழில் மரண விசாரணை அதிகாரிகளின் செயற்பாடுகள் மீது குற்றச்சாட்டு

யாழில் சில மரண விசாரணை அதிகாரிகள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு சேவையினை முன்னெடுக்கும் சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இறந்த உடலங்களுக்கான விரைவாக மரண விசாரணைகளையும், உடற்கூற்று பரிசோதனைகளையும் எதிர்பார்த்து மக்களும் இலஞ்சம் வழங்கவேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதிலும் அவர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பிரான்ஸுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, பணமோசடியில் ஈடுபட்ட மரண விசாரணை அதிகாரியொருவர் பருத்தித்துறையில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 இலட்சம் ரூபா மோசடி செய்தார் என்று அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டள்ளன.

இந்நிலையிவ் விசாரணைகளை மேற்கொண்ட குற்ற விசாரணைப் பிரிவு, மேற்படி மரண விசாரணை அதிகாரியை கைது செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, தண்டப்பணத்துடனக்தை செலுத்துமாறு கோரி அவரைப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...