24 66c96bb4a6735
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த பணமின்றி தவிக்கும் தேர்தல் ஆணைக்குழு

Share

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த பணமின்றி தவிக்கும் தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க(Ratnayake) தெரிவித்தார்.

இந்த வாரம் தேர்தல் ஆணைக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முடிவு குறித்து முதலில் கலந்துரையாடப்படும் என்று நம்புகிறோம் என்றார்.

இதன்படி உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேலதிக தீர்மானங்கள் எடுக்கப்படும் என தலைவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு (2023) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதமானதால், தேர்தலுக்காகச் செலவழிக்கப்பட்ட பணம் தவிர மற்ற அனைத்தும் திறைசேரிக்கு திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் பெறுவது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடவுள்ளதாக தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த விவகாரங்கள் அனைத்திலும் நுழைவதற்கு முன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விடயங்களை ஆணையம் கலந்துரையாட வேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்த வருடம் (2023) மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் அரசாங்க அச்சகத்தினால் வாக்குச் சீட்டுகளின் ஒரு பகுதி அச்சிடப்பட்டு கையிருப்பு வைக்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது. அச்சிடப்படாத வாக்குச் சீட்டுகளின் மீதி தொகையை அச்சிட முடியும் என்றும் தலைவர் தெரிவித்தார்.எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரை எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்மொழியப்பட்ட வேட்பாளர்களில் சிலர் நாட்டை விட்டு வெளியேறியமை, சிலர் உயிரிழந்துள்ளமை, சிலர் அரசியலை கைவிட்டமை தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய வேட்புமனுக்களை கோருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் ஆலோசனை நடத்துவது மற்றும் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. புதிய வேட்புமனுக்கள் கோரப்பட்டால், நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

Share
தொடர்புடையது
Untitled 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச அதிகாரிகளுக்குப் புதிய டிஜிட்டல் முறைமை: இன்று முதல் ஆன்லைனில் சொத்து விபரங்களைப் பதிய உத்தரவு!

இலங்கையில் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களைச் (Assets...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உணவுப் பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.

நாடு முழுவதும் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் முக்கிய உணவுப் பொருட்களின் விலைகளை...

Untitled 60
உலகம்செய்திகள்

சர்வதேச விதிகளை மீறும் செயல்: இஸ்ரேலின் மரண தண்டனைச் சட்டத்திற்கு ஐநா கடும் கண்டனம்!

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பாலஸ்தீனர்களுக்கான மரண தண்டனைச் சட்டம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதனை...

Untitled 59
உலகம்செய்திகள்

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்: பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதி!

இஸ்ரேலியர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகளாகக் காணப்படும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை (Death Penalty)...