24 66c96bb4a6735
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த பணமின்றி தவிக்கும் தேர்தல் ஆணைக்குழு

Share

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த பணமின்றி தவிக்கும் தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க(Ratnayake) தெரிவித்தார்.

இந்த வாரம் தேர்தல் ஆணைக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முடிவு குறித்து முதலில் கலந்துரையாடப்படும் என்று நம்புகிறோம் என்றார்.

இதன்படி உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேலதிக தீர்மானங்கள் எடுக்கப்படும் என தலைவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு (2023) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதமானதால், தேர்தலுக்காகச் செலவழிக்கப்பட்ட பணம் தவிர மற்ற அனைத்தும் திறைசேரிக்கு திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணம் பெறுவது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடவுள்ளதாக தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த விவகாரங்கள் அனைத்திலும் நுழைவதற்கு முன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விடயங்களை ஆணையம் கலந்துரையாட வேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்த வருடம் (2023) மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் அரசாங்க அச்சகத்தினால் வாக்குச் சீட்டுகளின் ஒரு பகுதி அச்சிடப்பட்டு கையிருப்பு வைக்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது. அச்சிடப்படாத வாக்குச் சீட்டுகளின் மீதி தொகையை அச்சிட முடியும் என்றும் தலைவர் தெரிவித்தார்.எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரை எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்மொழியப்பட்ட வேட்பாளர்களில் சிலர் நாட்டை விட்டு வெளியேறியமை, சிலர் உயிரிழந்துள்ளமை, சிலர் அரசியலை கைவிட்டமை தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

புதிய வேட்புமனுக்களை கோருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் ஆலோசனை நடத்துவது மற்றும் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. புதிய வேட்புமனுக்கள் கோரப்பட்டால், நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

Share
தொடர்புடையது
Tamil News lrg 4119716
செய்திகள்உலகம்

மதுரோவை எங்களிடம் ஒப்படையுங்கள்: அமெரிக்காவிடம் ஆர்ஜன்ரீனா உத்தியோகபூர்வக் கோரிக்கை!

மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்காவால் அண்மையில் கைது செய்யப்பட்ட வெனிசுலா...

download
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் ஆவணங்களால் அதிரும் பிரிட்டன்: மன்னிப்பு கோரினார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!

மறைந்த அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டதைத்...

Makadure Madush 1200px 24 11 07
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மஹரகமவில் பரபரப்பு: காவல்துறை கான்ஸ்டபிளைத் தாக்கிய மாகந்துரே மதுஷின் மனைவி மற்றும் மகன் கைது!

கொலை செய்யப்பட்ட பிரபல பாதாள உலகத் தலைவன் மாகந்துரே மதுஷின் மனைவி மற்றும் அவரது 21...

capture 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிள்ளைகளின் கல்வி உரிமையை பறிக்காதே: ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆசிரியர்கள் பாரிய போராட்டம்!

தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பிள்ளைகளை அந்தந்த பாடசாலைகளிலேயே அனுமதிக்கும் சலுகை...