24 66022fe82a0b7
இலங்கைசெய்திகள்

வயதான நபருக்கு இளைஞன் கொடுத்த அதிர்ச்சி

Share

வயதான நபருக்கு இளைஞன் கொடுத்த அதிர்ச்சி

புத்தளம், மாதம்பே பிரதேசத்தில் வயதானவரின் வங்கி அட்டையை திருடி 80 ஆயிரம் ரூபாய் பணம் பெற்ற பேரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருடிய பணத்தில் தனது மோட்டார் சைக்கிளை திருத்தியதாக கூறப்படும் 22 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பேரன் நான்கு முறை வங்கி அட்டையில் இருந்து இதுபோன்ற பணத்தை எடுத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தாத்தா பல வருடங்களாக கூலி வேலை செய்து சில வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர், அங்கு ஊழியர் நலன்புரி பணமாக 2 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டார்.

அவற்றை வங்கியில் வைப்பு செய்துவிட்டு மனைவியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த வாரம் ஒருநாள் அவரது மனைவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவரது சிகிச்சைக்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்காக வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கச் சென்றபோது அவருக்குத் தெரியாமல் வங்கிக் கணக்கில் இருந்து 82000 ரூபாய் குறைந்துள்ளமை உறுதி செய்துள்ளார்.

அதற்கமைய, பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற அவர் முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் பேரனை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் அனைத்தும் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, சந்தேகநபரை பெல்மடுல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...