24 66022fe82a0b7
இலங்கைசெய்திகள்

வயதான நபருக்கு இளைஞன் கொடுத்த அதிர்ச்சி

Share

வயதான நபருக்கு இளைஞன் கொடுத்த அதிர்ச்சி

புத்தளம், மாதம்பே பிரதேசத்தில் வயதானவரின் வங்கி அட்டையை திருடி 80 ஆயிரம் ரூபாய் பணம் பெற்ற பேரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருடிய பணத்தில் தனது மோட்டார் சைக்கிளை திருத்தியதாக கூறப்படும் 22 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பேரன் நான்கு முறை வங்கி அட்டையில் இருந்து இதுபோன்ற பணத்தை எடுத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தாத்தா பல வருடங்களாக கூலி வேலை செய்து சில வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர், அங்கு ஊழியர் நலன்புரி பணமாக 2 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டார்.

அவற்றை வங்கியில் வைப்பு செய்துவிட்டு மனைவியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த வாரம் ஒருநாள் அவரது மனைவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவரது சிகிச்சைக்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்காக வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கச் சென்றபோது அவருக்குத் தெரியாமல் வங்கிக் கணக்கில் இருந்து 82000 ரூபாய் குறைந்துள்ளமை உறுதி செய்துள்ளார்.

அதற்கமைய, பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற அவர் முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் பேரனை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் அனைத்தும் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, சந்தேகநபரை பெல்மடுல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...