24 66022fe82a0b7
இலங்கைசெய்திகள்

வயதான நபருக்கு இளைஞன் கொடுத்த அதிர்ச்சி

Share

வயதான நபருக்கு இளைஞன் கொடுத்த அதிர்ச்சி

புத்தளம், மாதம்பே பிரதேசத்தில் வயதானவரின் வங்கி அட்டையை திருடி 80 ஆயிரம் ரூபாய் பணம் பெற்ற பேரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருடிய பணத்தில் தனது மோட்டார் சைக்கிளை திருத்தியதாக கூறப்படும் 22 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பேரன் நான்கு முறை வங்கி அட்டையில் இருந்து இதுபோன்ற பணத்தை எடுத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தாத்தா பல வருடங்களாக கூலி வேலை செய்து சில வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர், அங்கு ஊழியர் நலன்புரி பணமாக 2 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டார்.

அவற்றை வங்கியில் வைப்பு செய்துவிட்டு மனைவியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த வாரம் ஒருநாள் அவரது மனைவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவரது சிகிச்சைக்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்காக வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கச் சென்றபோது அவருக்குத் தெரியாமல் வங்கிக் கணக்கில் இருந்து 82000 ரூபாய் குறைந்துள்ளமை உறுதி செய்துள்ளார்.

அதற்கமைய, பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற அவர் முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் பேரனை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் அனைத்தும் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, சந்தேகநபரை பெல்மடுல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...