18
இலங்கைசெய்திகள்

குழந்தைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Share

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருளான டோபமைனின் (Dopamine) வெளியிடுதல் தாமதமாகும் போது குழந்தைகள் கையடக்க தொலைபேசிகளில் செலவிடும் நேரம் அதிகரிக்கிறது, அதனால் குழந்தைகள் அதற்கு அடிமையாவது அதிகமாகிறது என்று அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் குழந்தை மற்றும் இளம் பருவ மனநல மருத்துவரான சேனானி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் கையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையாவதற்கான மருத்துவ காரணம் குறித்து தெளிவுபடுத்தும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது: குழந்தைகள் தொலைபேசியை பாவிப்பதன் மூலம் மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள்.

மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இரசாயனம் டோபமைன், ஆரம்ப நாட்களில் தொலைபேசியை பாவிக்கும் மிகக் குறுகிய நேரத்திற்குள் வெளியிடப்படும் போது குழந்தை மகிழ்ச்சியடைகிறது.

பின்னர் குழந்தைகள் தொலைபேசியை வைத்து விடுகிறார்கள். ஆனால் நேரம் செல்ல செல்ல, டோபமைன் வெளியிட எடுக்கும் நேரம் அதிகரிக்கிறது.

உதாரணமாக, ஆரம்ப நாட்களில் டோபமைன் அரை மணி நேரம் வெளியிடப்பட்டால், பின்னர் வெளியிட ஒரு மணி நேரம் ஆகும்.

பின்னர் குழந்தை சுமார் ஒரு மணி நேரம் தொலைபேசியை கீழே வைக்காது. அதிக நேரம் டோபமைன் வெளியிட இரண்டு, மூன்று அல்லது நான்கு மணிநேரம் கூட ஆகலாம்.

குழந்தை சுமார் நான்கு மணி நேரம் தொலைபேசியை கீழே வைக்க மாட்டார்கள்.

ஒரு குழந்தை தொலைபேசிக்கு அடிமையாகி இருப்பதை நாம் இப்படித்தான் பார்க்கிறோம்.

எனவே, குழந்தைகள் தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். பெற்றோர்கள் அதை மேற்பார்வையிட வேண்டும்.

குழந்தைகள் அறைகளிலிருந்து தொலைபேசியைப் பாவிக்க அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் வீடியோ கேம்களில் கவனம் செலுத்த விடாதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...