15 1 scaled
இலங்கைசெய்திகள்

3 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி : ஒருவருடன் கைது

Share

3 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி : ஒருவருடன் கைது

திவுலபிட்டிய, கொங்கடமுல்ல பிரதேசத்தில் இருந்து சுமார் 3 மாதங்களாக காணாமல் போயிருந்த சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியுடன் இருந்த மற்றுமொருவர் படல்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலபிட்டிய கொங்கடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், அவரது தாயார் 3 மாதங்களுக்கு முன்னர் படல்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன சிறுமியை பொலிஸார் பலமுறை தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்னர், சிறுமியைக் கண்டுபிடிக்கும் நோக்கில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் பல குழுக்கள் களமிறக்கப்பட்டன.

குறித்த சிறுமி கட்டுநாயக்க பிரதேசத்தில் தங்கியிருப்பதாக பொலிஸ் குழுவிற்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதற்கமைய, அந்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் குழு, சிறுமியையும், சிறுமியுடன் இருந்த ஒருவரையும் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட சிறுமி படல்கம பொலிஸாருக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
02 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுமக்களின் கருத்துகளைக் கோரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (ஏப்ரல் – ஜூன்) மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி...

01 11
செய்திகள்உலகம்பிராந்தியம்

மத்திய கிழக்கு கடல்வழிப் பதற்றம்: மேலும் மூன்று கப்பல்கள் மீது தாக்குதல்!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழலுக்கு மத்தியில், வளைகுடா பிராந்தியத்தின் கடல்வழிகளில் தாக்குதல்கள் தொடர்கின்றன....

30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...