MediaFile 2 4
இலங்கைசெய்திகள்

நிவாரணம் வழங்குவதாகக் கூறும் மோசடிக்காரர்களிடம் அவதானமாக இருங்கள் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரிக்கை!

Share

‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி, தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி, சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களைச் (Personal Information) சில மோசடிக்காரர்கள் பெறும் சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளன.

பேரிடருக்குப் பின்னரான நிவாரணச் செயற்பாடுகளுக்கான தகவல் சேகரிப்பானது, அமைச்சுடன் இணைந்த கள அலுவலர்கள் மற்றும் கிராம சேவகர்களுடன் இணைந்து, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக மாத்திரமே இடம்பெறுவதாக அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், தமது தனிப்பட்ட தகவல்களை மோசடிக்காரர்களிடம் பகிர்வதைத் தவிர்க்குமாறும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...