17
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

Share

உப்பு இறக்குமதி செய்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சினாலோ அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்களினாலோ எவ்வித இடையூறுகளும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பதில் பணிப்பாளர் நாயகம் ரீ.பி. ஆனந்த ஜயலால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உப்பு இறக்குமதி செய்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களினால் பல்வேறு இடையூறுகள் விளைவிக்கப்படுவதாக போலிச் செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான எவ்வித இடையூறுகளோ அல்லது தடைகளோ உப்பு இறக்குமதி செய்வதற்கு கிடையாது என அறிவித்துள்ளார்.

மேலும் உப்பு இறக்குமதி செய்வதற்காக கடந்த 22ம் திகதி வரையில் 117 பேர் விண்ணப்பித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 150000 மெற்றிக் தொன் உப்பு இறக:குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகஅவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உப்பு துறைமுகத்தை அடைந்ததன் பின்னர் அவற்றை வேகமாக விடுவிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...