Map of Delft Island
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெடுந்தீவில் பின்வாங்கிய வன பாதுகாப்பு அமைச்சு!!!

Share

நெடுந்தீவில் சுமார் 1200 ஹெக்டேயர் நிலப்பரப்பை வன, விலங்கு பாதுகாப்பு சரணாலயம் அமைப்பதிலிருந்து விடுவித்து வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு கடந்த 2015 ஜூன் 22 ஆம் திகதியன்று நெடுந்தீவில் 1728.11 ஹெக்டேயர் நிலப்பகுதியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வன,விலங்கு பாதுகாப்பு சரணாலயமாக அறிவித்திருந்தது.

இவ்வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்ட நிலப் பகுதியில் பெருமளவான பகுதியை விடுவிக்குமாறு வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சின் வட மாகாண பணிப்பாளர் மா.பரமேஸ்வரன் வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரட்னாயக்காவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து அமைச்சரின் உத்தரவுக்கு அமைய அமைச்சின் செயலாளர் எம்.கே.பந்துல ஹரிச்சந்திர வன,விலங்கு பாதுகாப்பு சரணாலமாக அறிவிக்கப்பட்ட பகுதியிலிருந்து 537 ஹெக்டேயர் தவிர 1191.11 ஹெக்டேயரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பகுதியை விடுவிப்பதற்கான நடவடிக்கை யாழ்.மாவட்ட செயலக மட்டத்தில் இடம்பெற்று வருவதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனினும் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ வடக்கின் தென்னை முக்கோண வலயமாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் முதலாவதாக நெடுந்தீவில் பாரிய தென்னை பயிற்செய்கை மேற்கொள்ள முன்மொழிந்துள்ளார்.

இதன் மூலம் 2000 மில்லியன் ரூபா வருமானத்தை நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெற்றுக் கொடுக்க முடியுமென்பதுடன் தொழில் வாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கு உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தென்னை செய்கை தனியார், பொது மக்கள் பங்குடமை தொழில் திட்டமாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இதன் மூலம் நெடுந்தீவில் பயன்பாடற்றிருக்கும் நிலப்பகுதி பயன்படுத்தப்படுவதன் மூலம் உல்லாச துறைக்கும் வலுசேர்க்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#SrilankaNews

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6956109675232
செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கர வெடிவிபத்து: பலர் உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) நகரில் உள்ள ஒரு பாரில் (Bar) ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கிப்...

WhatsApp Image 2025 07 30 at 10.13.14 1
இலங்கைஅரசியல்செய்திகள்

குற்றவாளிகள் எங்கு இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் வலியுறுத்தல்!

வடக்கு அல்லது கிழக்கு என எந்தப் பிரதேசத்தில் யார் கைது செய்யப்பட்டாலும், அவர்கள் கடந்த காலத்தில்...

MediaFile 5
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கப்பட்ட 19 துப்பாக்கிகள்: CID தீவிர விசாரணை என அரசாங்கம் தகவல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அது சார்ந்த விவகாரங்கள் குறித்து குற்றப்...

feeffef8b9eb82ce9b06f1c9550878a1460042ec
செய்திகள்அரசியல்இலங்கை

வரி ஏய்ப்பாளர்களுக்கு ஜனாதிபதியின் கடும் எச்சரிக்கை: வாகன இறக்குமதியை நிறுத்த முடியாது!

இலங்கையில் வரி ஏய்ப்பு செய்யும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது தராதரம் பாராது...