அரசியல்இலங்கைசெய்திகள்

உக்ரைனில் இலங்கையர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திய வெளிவிவகார அமைச்சு!!

நாடு திரும்பினர் 8
Share

உக்ரைனில் போர்க்கால சூழல் நிலவும் நிலையில் இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உக்ரேனில் வாழும் இலங்கையர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு 42 இலங்கையர்கள் வாழ்கின்றனர். அவர்களில் எழுவர் மாணவர்கள் ஆவர்.

அத்துடன், உக்ரேனிலுள்ள இலங்கையர்கள் எவ்வித பிரச்சினையும் இன்றி, வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கை தூதரகமொன்று உக்ரேனில் இல்லாத நிலையில், துருக்கியிலுள்ள தூதரகத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக உக்ரேனில் அவசர நிலைமை ஏற்படும் பட்சத்தில், அங்குள்ள இலங்கையர்களை துரித கதியில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...