16 14
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

Share

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை குறித்து பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு(Sri Lankan Ministry of Education) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், பாடசாலை மாணவர்கள் செயற்படும் விதத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தற்போதைய நாட்களில் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஏதேனும் ஆலோசனைகள் வழங்கப்படுமாயின் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “ தற்போதைய சூழ்நிலை தொடர்பில் நாளைய தினம் (17) கலந்துரையாடல் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேவையேற்படின் பாடசாலை அதிபர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பாடசாலை மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதிக சூரிய ஒளியில் இருப்பதனை தவிர்க்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட உலகின் மத்திய ரேகை பகுதியில் உள்ள பல நாடுகளில் தற்போதைய நாட்களில் அதிக வெப்பநிலை நிலவுகிறது.

அதன்படி, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளும் அதிக வெப்பநிலையினால் பாதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கொழும்பு, காலி, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் வெப்பநிலையானது எதிர்வரும் நாட்களில் 32 முதல் 36 பாகை செல்சியஸ் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலையினால் உடல் வெப்பநிலை அதிகரித்து பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படக்கூடும் என்பதால் அதிகளவில் நீர் அல்லது இயற்கை பானங்களை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.

Share
தொடர்புடையது
im 83941943
செய்திகள்உலகம்

சீன இராணுவத்தில் அதிரடி சுத்திகரிப்பு: மிகச்சக்திவாய்ந்த ஜெனரல் ஜாங் யௌஷியா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்!

ஒழுக்கக் குறைபாடு மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பாக, சீன இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியில் உள்ள...

Untitled 113 2
இலங்கைசெய்திகள்

தனியார் மற்றும் அரை அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்: EPF நிதியில் மாற்றமில்லை என அரசாங்கம் உறுதி!

தனியார் மற்றும் அரை அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கெனப்...

sajith rw 2 800x533
செய்திகள்அரசியல்இலங்கை

சஜித் மற்றும் ஐதேக தலைவர்களுக்கு இடையில் தீர்க்கமான சந்திப்பு!

இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி...

26 697477a9b13c1 1
செய்திகள்இலங்கை

விளக்கமறியலில் உள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் திடீர் சுகவீனம்: திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர், ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாகத் திருகோணமலை பொது...