9 17
இலங்கைசெய்திகள்

ரணிலுடன் இணையும் பிரபலங்கள் – நாளை முக்கிய முடிவை அறிவிக்கும் மகிந்த

Share

ரணிலுடன் இணையும் பிரபலங்கள் – நாளை முக்கிய முடிவை அறிவிக்கும் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

விஜேராம பிரதேசத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பில், சுசில் பிரேமஜயந்த மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் மகிந்தவுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது திங்கட்கிழமை கட்சியின் அரசியல் குழுவுடன் கலந்துரையாடி தனது முடிவை அறிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த அதிகளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...