12
இலங்கைசெய்திகள்

விஐபி கதிரையை ஏற்க மறுக்கும் அமைச்சர்

Share

விஐபி கதிரையை ஏற்க மறுக்கும் அமைச்சர்

நிகழ்வுகளில் தமக்கு விசேட பிரமுகர்கள் அமரும் கதிரைகளை கொண்டு வரவேண்டாம் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன(shandana abeyratne) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புத்தளம்(puttalam) மாவட்ட இலக்கிய விழாவிற்காக ஆனமடுவ சுதம்பாய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்விற்கு வருகை தருகின்றார்கள் என்பதற்காக, தேவையில்லாத செலவு எதனையும் செய்யவேண்டாம். அத்துடன் நான் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளின் செலவையும் குறைப்பது தொடர்பாக நிறுவனங்களுக்குத் தெரிவிக்க தயாராகி வருகிறேன்.

அதேபோன்று விசேட பிரமுகர்கள் அமர்வதற்கான கதிரைகளை எமக்கு கொண்டு வர வேண்டாம். நாங்கள் சாதாரண பிளாஸ்டிக் கதிரைகளில் அமர்ந்தவர்கள். அந்த கதிரைகள் போதும்.

இந்த ஆனமடுவை எமக்கு அறிமுகமில்லாத பிரதேசம் அல்ல.எனவே அந்தச் சூழலினால் எவ்வளவோ உயரிய பதவிகளுக்குச் சென்றாலும் மரங்களும் பசுமையான ஏரிகளும் கொண்ட அழகிய இடம் இது , நாம் இருந்த கடந்த காலத்தை மறக்க முடியாது. எனவே, எந்த நிகழ்ச்சிக்கும் தேவையில்லாத செலவு செய்து பணத்தை வீணாக்க விரும்பவில்லை என்றார்.

Share
தொடர்புடையது
world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...