இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை

Share
tamilni 284 scaled
Share

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை

காடுகளுக்கு தீ மூட்டுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று(13) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையை பயன்படுத்திக்கொண்டு சிலர் காடுகளுக்கு தீ மூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலாேசனை வழங்கி இருக்கிறோம்.

காடுகளுக்கு தீ வைப்பது சட்டவிராேதமான செயலாகும். அவ்வாறான சம்பவங்கள் சில கடந்த சில தினங்களாக இடம்பெற்றுள்ளமை தொடர்பில் எமக்கு அறியக்கிடைத்திருக்கிறது.

ஒரு சில இடங்களில் இது போன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் போது அதனை முப்படைகளின் உதவியுடன் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். அத்துடன் காடுகளுக்கு தீ மூட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அதேபோன்று சிலர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக தீ மூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது பாரிய விளைவுகளை ஏற்படும் அபாயம் இருக்கிறது.

நாட்டில தற்போது வரட்சியான காலநிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சில பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதேபோன்று விவசாய பிரதேசங்களும் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படும் அபாயம் இருந்து வருகிறது. இந்த வரட்சியான காலநிலை ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரும் எனவும் அதன் பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக காலநிலை மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த நிலைமைகளை கருத்திற்கொண்டு குடிநீருக்கு தட்டுப்பாடு இடம்பெறும் பிரதேசங்களுக்கு தேவையான நீரை பெற்றுக்கொடுக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம்.”என கூறியுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...