7 9
இலங்கைசெய்திகள்

மகிந்த ஆரம்பித்த மிஹின் லங்கா விமான சேவை : வெளியான தகவல்கள்

Share

மகிந்த ஆரம்பித்த மிஹின் லங்கா விமான சேவை : வெளியான தகவல்கள்

2007ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) நிர்வாகத்தால் ஆரம்பிக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான மிஹின் லங்கா தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிறுவனம் பாரிய நட்டத்தை சந்தித்ததுடன், பொது நிதியும் வீணடிக்கப்பட்டது. இதனையடுத்து, 2016ஆம் ஆண்டு விமான நிறுவனம் தனது செயற்பாடுகளை முடித்துக்கொண்ட போதும், செயற்பாட்டை முடிவுறுத்தும் செயன்முறை இன்னும் முழுமையடையாமல் உள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதே சமயம் இரண்டு அரசு வங்கிகள், குறித்த நிறுவனத்துக்கு வழங்கிய பில்லியன் கணக்கான ரூபாய் கடன்களை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2024 ஒக்டோபர் வரவு செலவு அறிக்கையின்படி, மிஹின் லங்கா இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு தலா 3.17 பில்லியன் ரூபாய்களை செலுத்த வேண்டும்.

பகுதி வட்டி செலுத்தப்பட்டாலும், அசல் தொகை இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது.

ரூபாய் கடன்களுக்கு மேலதிகமாக மிஹின் லங்கா நிறுவனம், அமெரிக்க டொலரில் கடனை பெற்றிருந்தமையால், அது கடனை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...