4 5
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை – பெருந்தொகையான இலங்கையர்களுக்கு ஆபத்து

Share

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை – பெருந்தொகையான இலங்கையர்களுக்கு ஆபத்து

மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக 4 நாடுகளில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்களின் தொழில் ஆபத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, இஸ்ரேலில் 12 ஆயிரம், ஜோர்தானில் 15 ஆயிரம், லெபனானில் 7500, எகிப்தில் 500 இலங்கைத் தொழிலாளர்கள் பணிபுரிவதாகக் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யுத்த மோதல்கள் உருவாகும் பட்சத்தில் அந்த நாடுகளில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களையும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், இலங்கை பணியாளர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு சகல வசதிகளும் செய்து தரப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களை அழைத்து வருவதற்கு ஏற்கனவே 5 மில்லியன் டொலர்களுக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் கானி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நாட்டில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்கான முன் தயாரிப்பாக தேசிய பாதுகாப்பு குறித்த குழு, பொருளாதாரத்திற்கான குழு, மேலும், இரண்டு குழுக்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட உயர்மட்டக் குழுவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
w 412h 232imgid 01j9e8833zvmskxd27dc9gr2peimgname 310 job vacancies in uae and odepec conducts recruitment with free visa accomodation and insurance
செய்திகள்இலங்கை

ரூ. 740 மில்லியனுக்கும் அதிகமான மோசடி: ருமேனிய வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் விளக்கமறியலில்!

ருமேனியாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, வேலை தேடுபவர்களிடமிருந்து 740 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக மோசடி...

25 690615b57da4a
செய்திகள்இலங்கை

மோசமான நிர்வாகத்தின் விளைவு: இலங்கை ஆட்சி மாற்றம் குறித்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கருத்து!

வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாளத்தில் சமீபத்திய ஆட்சி மாற்றங்கள் மோசமான நிர்வாகத்தின் விளைவுகளை எடுத்துக்காட்டுகின்றன என்று...

23 64e4c01e53a82
செய்திகள்இலங்கை

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் 25 முக்கிய கடத்தல்காரர்கள் அடையாளம்: அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள்!

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 25 முக்கிய கடத்தல்காரர்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகப் பொதுப்...

images 4
செய்திகள்இலங்கை

பெரிய வெங்காயம் கொள்வனவில் அளவு அளவிடப்படுவதில்லை: ‘கண் மட்டத்தில்’ மட்டுமே ஆய்வு – லங்கா சதோச விளக்கம்!

விவசாயிகளிடமிருந்து பெரிய வெங்காயத்தைப் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ள லங்கா சதோச கொள்வனவு செய்யப்படும் வெங்காயத்தின் அளவு...