tamilnaadi 31 scaled
இலங்கைசெய்திகள்

நுண்கடன்களை செலுத்த முடியாத உயிரை மாய்த்துள்ள 200 பெண்கள்

Share

கடந்த மூன்று வருடங்களில் நுண்கடன்களை செலுத்த முடியாத குடும்பங்களைச் சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட பெண்கள் உயிரை மாய்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிதிக் கடன் விவகாரம் மீதான விவாதம் இடம்பெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இந்த சட்டமூலத்தின் முக்கிய நோக்கம் கடன் மற்றும் நுண்கடன் வணிகங்களை ஒழுங்குபடுத்துவது மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதாகும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக மத்திய திறைசேரி, மத்திய வங்கி மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் அதிகாரபூர்வமாக நியமிக்கப்படவுள்ளார்.

அத்துடன், நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநருக்கு தலா நான்கு பிரதிநிதிகளை நியமிக்க அதிகாரம் வழங்கப்படவுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....