1 1 1
இலங்கை

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து மோதி ஒருவர் பலி

Share

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து (jaffna) கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் கிளிநொச்சி (Kilinochchi) பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ – 09 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்று (23.08.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 10.30 மணியளவில் நடந்து சென்ற நபர் வீதியின் நடுவே நின்று பேருந்தை மறித்துள்ளார்.

இந்நிலையில் பேருந்தின் நடத்துநர் மறித்தவரை வீதியை விட்டு விலகி நிற்குமாறு பேசி விட்டு பேருந்தை எடுக்க முற்படுகையில் குறித்த நபர் தடக்கி வீழ்ந்த போது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபத்து தொடர்பாக பளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...

25 688ddffa557e6
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை: விதிமுறையை மீறினால் சட்ட நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் பின்புற பயணிகள் ஆசனப்பட்டி அணிவது நேற்று (01) முதல்...