1 1 1
இலங்கை

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து மோதி ஒருவர் பலி

Share

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து (jaffna) கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் கிளிநொச்சி (Kilinochchi) பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ – 09 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்று (23.08.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 10.30 மணியளவில் நடந்து சென்ற நபர் வீதியின் நடுவே நின்று பேருந்தை மறித்துள்ளார்.

இந்நிலையில் பேருந்தின் நடத்துநர் மறித்தவரை வீதியை விட்டு விலகி நிற்குமாறு பேசி விட்டு பேருந்தை எடுக்க முற்படுகையில் குறித்த நபர் தடக்கி வீழ்ந்த போது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபத்து தொடர்பாக பளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

Murder Recovered Recovered Recovered 16
இலங்கைசெய்திகள்

நெதன்யாகுவின் வீழ்ச்சி..! இஸ்ரேல் மக்களே வெளிப்படுத்திய விடயம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அந்நாட்டு பொது மக்களின் நம்பிக்கை வெறும் 40 சதவீதமாக...

Murder Recovered Recovered Recovered 13
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது....