2 15
இலங்கைசெய்திகள்

கண்டியில் சண்டித்தனம் செய்த ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்!

Share

கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், கண்டி மருத்துவமனை வளாகத்தில் அடாவடியாக நடக்க முயன்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த 25ம் திகதி கண்டி மருத்துவமனை வளாகத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடந்த 25ம் திகதி, கண்டி மருத்துவமனைக்கு உள்ளாக செல்லும் வழிப்பாதையால் தனது வாகனத்தில் உட்பிரவேசிக்க முயன்றுள்ளார்.

அதன்போது அவரது வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதற்கான இலச்சினையோ, அரச இலச்சினையோ இல்லாத நிலையில் பாதுகாப்புத் தரப்பினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதனையடுத்து அவர் பாதுகாப்புப் பிரிவு ஊழியர்களுடன் கடுமையாக வாய்த் தர்க்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”என்னை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா” என்று அவர் உரத்த குரலில் கேட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அவ்விடத்துக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்ட போதும், அவர்களுக்கும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பொலிஸாருடன் கடுமையாக வாய்த்தர்ககம் செய்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்களை விட தற்போதைய ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும் குறுகிய காலத்துக்குள்ளாகவே அடாவடித்தனங்களை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதாக இதன்போது பொலிஸார் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சம்பவம் தொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கண்டி மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...